நேற்றிரவு 9 மணி வரை, 44 சுற்றுலா பயணிகள் வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். அவர்களு்ககான ஏற்பாடு பணிகள் கையாளப்படுகின்றன என்று சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா துறை ஆணையத்தின் தலைவர் Zhang Gu கூறினார்.
பூர்த்தியாகாத புள்ளிவிபரங்களின் படி, நிலநடுக்கம் ஏற்பட்ட போது, 5167 சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளன. நேற்றிரவு 9 மணி வரை, அவர்களில் 3700 பயணிகள் மீட்புஉதவி பெற்றனர். காயமுற்றோர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 44 உயிரிழந்தோருக்கான ஏற்பாடு பணிகள் கையாளப்படுகின்றன என்று Zhang Gu கூறினார். சிச்சுவான் மாநிலத்திலுள்ள பல புகழ் பெற்ற சுற்றுலா காட்சி தலங்கள் கடுமையாக சீர்குலைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தவிர, புள்ளிவிபரங்களின் படி, தற்போது சிச்சுவான் மாநிலத்தில் 93 வெளிநாட்டு பயணிகள் உள்ளனர். நேற்று நண்பகல் வரை, 31 பிரிட்டன் பிரித்தானியர், 2 இஸ்ரேலியர், 12 அமெரிக்கர் மீட்புஉதவி பெற்றனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
|