மே 18ம் நாள் விடியற்காலை வரை, சீனச் சுகாதார அமைச்சகம் அனுப்பிய 640க்கு அதிகமான மருத்துவப் பணியாளர்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, சிச்சுவான் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கடும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதார நிகழ்ச்சி ஏதும் நிகழவில்லை. இரத்தத்துக்கான விநியோகத்தில் பதற்ற நிலைமையும் ஏற்படவில்லை.
நோய் தடுப்புப் பணி
மே 18ம் நாள் விடியற்காலை வரை, சீனச் சுகாதார அமைச்சகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மொத்தம் 5500க்கு மேலான மருத்துவப் பணியாளர்களையும் 500க்கு அதிகமான அவசர மருத்துவ உதவி வண்டிகளையும் அனுப்பியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் மருத்துவக் குழுகள் உள்ளன. மேலும் அதிகமான மீட்புதவி மருத்துவ பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைவாக அனுப்பப்பவுள்ளன.
18ம் நாள் காலை 10மணி வரை, சீனப்படையைச் சேர்ந்த 3020மருத்துவ பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் 35 மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|