கடந்த சில நாட்களாக, வெளிநாடுகளிலுள்ள சீன தூதரகங்கள், வெளிநாட்டிலுள்ள சீனர்கள், சீன நிறுவனங்கள், சீன மாணவர்கள் ஆகியோர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களில் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
துருக்கியிலுள்ள சீன தூதரகமும், துருக்கி-சீன மகளிர் நட்புறவுச் சங்கமும் நேற்று தலைநகரான அங்காராவில் நன்கொடை நடவடிக்கையை மேற்கொண்டன. துருக்கியின் பல்வேறு துறைகளும் உள்ளூர் சீனர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுமார் இலட்சத்து 60 ஆயிரம் யுவான் நிதியுதவியை வழங்கினர். இதற்கு முன்பு, துருக்கி சீனாவுக்கு 30ஆயிரம் அமெரி்க்க டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
தவிர, நைஜீரியா, கென்யா, பெல்ஜியம், பிரிட்டன், ஈக்வடோர் ஆகிய நாடுகளிலுள்ள சீனர், சீன தொழில் நிறுவனங்கள் முதலியவை நிதியுதவியை வழங்கியுள்ளன.
நேற்று வரை, இஸ்ரேலிலுள்ள சீனர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இஸ்ரேலின் நட்பு பிரமகர்கள் ஆகியோர் வழங்கிய 30ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவியை, இந்நாட்டிலுள்ள சீன தூதரகம் ஏற்றுக்கொண்டது.
பாகிஸ்தானிலுள்ள சீன நிறுவனங்கள், தொழில் முனைவோர், பாகிஸ்தானின் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று சீன தூதரகங்களுக்குச் சென்று நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
|