சி ச்சுவான் மாநிலத்தின் ஓ லோங் இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தில் வளர்ந்து வந்த மூன்று இராட்சத பாண்டாக்கள், நிலநடுக்கத்தின் போது, காணாமல் போயுள்ளன. பிற 60 இராட்சத பாண்டாக்கள் பாதிப்பேதுமின்றி தப்பின.
சி ச்சுவான் வென் ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீனத் தேசிய வனத்தொழில் ஆணையம், மீட்புதவிப் பணிக்கு பணிக் குழுவை உடனடியாக அனுப்பியது. அக்குழு, வனத்தொழில் மீட்புதவிக்கு வழிக்காட்டி, இராட்சத பாண்டாவுக்கான மீட்புதவிப் பணி மேற்கொண்டு, ஓ லோங் இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்திலுள்ள வசதிகளை பன்முகங்களிலும் பரிசோதனை செய்து, செப்பனிட்டுள்ளது.
இராட்சத பாண்டாவுக்கான மீட்புதவிப் பணி
சி ச்சுவான் வென் ச்சுவான் நிலநடுக்கத்தால், சி ச்சுவான், ஷான் சி முதலிய காட்டு இராட்சத பாண்டாக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு, வேறுப்பட்ட அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டு இராட்சத பாண்டாக்களின் நிலைமைக்கான கண்காணிப்பை வலுப்படுத்துவதோடு, இராட்சத பாண்டா நோய் வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற இராட்சத பாண்டாக்களைக் கண்டறிந்தால், உடனடியாக அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் என்று சீனத் தேசிய வனத்தொழில் ஆணையம் தெரிவித்தது.
|