வெளிநாட்டு தலைவர்களின் ஆறுதல்
cri
அண்மையில், வட கொரியா, பெரு, ஈக்குவடோர் கினி, சிலி, லெபனான், ஐவரிகோஸ்ட்டு முதலிய நாடுகளின் தலைவர்கள், சீன தூதரகங்களுக்குச் சென்று வென்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். வட கொரிய தலைவர்களும், தொடர்புடைய அமைப்புகளின் பொறுப்பாளர்களும், மங்கோலிய நாடாளுமன்றத் தலைவரும், வெளியுறவு அமைச்சரும், இன்று அந்நாடுகளிலுள்ள சீன தூதரகங்களுக்குச் சென்று வென்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். சீன மக்கள் பேரழிவை வென்று தாயகத்தை மறுசீரமைப்பது திண்ணம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நேற்று முற்பகல், பெரு அரசுத் தலைவர் சீன தூதரகத்துக்கு சென்றார். சீன அரசின் விரைவான, பயனுள்ள பேரிடர் நீக்கப் பணியை அவர் மனமாக வியல்த்து பாராட்டினார். சீன வெகு விரைவில் சிக்கல்களை வென்று, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிக்கரமாக நடத்துவது திண்ணம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். .
|
|