சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொருள் விநியோகத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீன அரசு முழு மூச்சுடன் உத்தரவாதம் செய்து வருகின்றது. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இன்று இதை அறிவித்தது.
இன்று பிற்பகல் 2 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில், மொத்தம் 1172.7 கோடி யுவானை ஒதுக்கியுள்ளன. சி ச்சுவான், கான் சூ, ஷான் சி, சுங் சிங், யுன்னான் ஆகிய பிரதேசங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக வாழ்க்கை நலலுக்கெனே, நடுவண் நிதி இன்று 250கோடி யுவானை அவசரமாக ஒதுக்கியுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி வரை, சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மொத்தம் 1390 கோடி யுவான் மதிப்புள்ள நிதி மற்றும் பொருட்களை வழங்கியுள்ளன. இதில் நன்கொடைத் தொகை 1250 கோடியைத் தாண்டியுள்ளது.
இன்று மாலை 6மணி வரையிலான நிலவரங்களின் படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆயிரத்து75 ஆகும். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.4 இலட்சத்துக்கு மேலாகும்.
|