வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் பாராட்டு
cri
கடந்த சில நாட்களில் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் தொடர்ந்து சீனாவின் பேரிடர் நீக்கப்பணி பற்றி கட்டுரைகளை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீன அரசின் விரைவான ஏற்பாடுகளை பாராட்டின. அமெரிக்காவின் ஆசிய wall street நாளேடு நேற்று வெளியிட்ட கட்டுரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யும் சீன அரசின் முயற்சி சர்வதேச சமூகத்தின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்று கூறியது. வீடுவாசலின்றி அல்லல்பட்ட மக்களைக் காப்பாற்றுவதில் சீன அரசு வெளிநாடுகளுக்கு மேலும் திறந்து வைத்துள்ளது என்று பிரான்ஸ் AFP செய்தி நிறுவனம் கூறியது. பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாகக் குடியமர்த்த சீன அரசு முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்றது என்று அமெரிக்க AP செய்தி நிறுவனம் கூறியது. பேரிடர் நீக்கப் பணியை விரைவாக மேற்கொண்டமை சீனாவின் வலுவான பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. அரசின் வழிக்காட்டல், இராணுவத்தின் வலுவான ஆற்றல், தொழில் துறைகளின் நிதி ஆற்றல், தனிநபர் தொண்டர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் முயற்சி ஆகியவை தத்தம் மேம்பாட்டை வெளிப்படுத்தி, சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன என்று கனேடிய The Globe and Mail நாளேடு 20ம் நாள் கூறியது.
|
|