23ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது. 1கோடியே 13லட்சத்து 60ஆயிரம் பேர் பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்டனர்.
இன்று சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்க தலைமையகத்தின் கோரிக்கைக்கு இணங்க, சீன அரசவையின் செய்தி அலுவலகம் இத்தகவலை அறிவித்தது.
23ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தில் 2லட்சத்து 9ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். 24ஆயிரம் 960பேர் காணாமல் போயினர். சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 2460 கோடி யுவானுக்கு மேலாகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமுற்றோரின் மொத்த எண்ணிக்கை 73ஆயிரத்து 900ஆகும். அவர்களில் 28ஆயிரத்து 300 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருத்துவ மீட்புதவிப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 86ஆயிரத்து 500 ஆகும்.
தவிரவும், 23ம் நாள் பிற்பகல் 2மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணியில் மொத்தம் 1460கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கியுள்ளன.
|