நோய் தடுப்பு பணியாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் கிராமபுறங்களிலும் நுழைய வேண்டும். சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணியை பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும் என்று சீன அரசவையின் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி தலைமையகத்தின் சுகாதார மற்றும் நோய் தடுப்பு குழுவின் தலைவர் கௌ ச்சியங் இன்று கோரிக்கை விடுத்தார்.
சுகாதார அமைச்சகத்தின் பணியாளர்களும், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்களும், கடுமையாக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நுழைந்துள்ளனர்.
3 நாட்களில், சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணி, கிராமகளுக்கு பரவல் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சகம் முடிவு மேற்கொண்டது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவைபட்ட நோய் தடுப்பூசி மருந்துகளும், இப்பிரதேசங்களுக்கு ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தற்போது, இப்பிரதேசங்களில், கடுமையான தொற்று நோய் மற்றும் திடீர் பொது சுகாதார நிகழ்ச்சி இருக்க வில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியது.
|