கடந்த சில நாட்களில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மீட்புப் பணி, நோய் தடுப்பு, பேரழிவுக்கு பிந்திய மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு சீனாவின் பல்வேறு பிரதேசங்கள் உதவி செய்துள்ளன.
இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பெய்ஜிங் வழங்கிய நன்கொடை 140 கோடி யுவானை எட்டியுள்ளது.
25ம் நாள் பிற்பகல் 3 மணி வரை, 240 கோடி யுவான் மதிப்புள்ள நன்கொடை மற்றும் 32 ஆயிரம் கூடாரங்களை zhejiang மாநிலம் வழங்கியுள்ளது. இது வரை, இம்மாநிலம் ஆயிரத்து 500 ஊழியர்கள் கொண்ட மருத்துவ குழுவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.Heilongjiang மாநிலத்தின் பொதுத் துறை அமைச்சகம் ஒரு இலட்சம் ஆடைகளையும், ஏறக்குறைய 4 ஆயிரத்து 600 டன் அரிசியையும் gansu மாநிலத்துக்கு அவசரமாக அனுப்பியுள்ளது. நிலநடுக்கத்துக்கு பிந்திய உளநல சிகிச்சை மற்றும் ஆலோசனை பற்றிய 60 ஆயிரம் நூல் பிரதிகளை anhui மாநிலம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.
|