• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 09:29:16    
சீனர்கள் மற்றும் வளரும் நாடுகளின் அதிகப் பெருமை

cri
சீனர்கள் மற்றும் வளரும் நாடுகளின் அதிகப் பெருமை பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாகும். சீனாவிலுள்ள வங்காளத்தேசத்தின் தூதர் Ahmad, பெய்சிங்கில் சீனாவின் வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
வங்காளத்தேசத்தின் அரசு மற்றும் மக்களின் சார்பில் Ahmad, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்கு ஆழந் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

மீட்புஉதவிக் குழுவை அனுப்புவது குறித்து, வங்காளத்தேச அரசும் சீன அரசும் கலந்தாய்வு மேற்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பெய்சிங்கில் நடைபெறுவது அனைத்து மக்களினும் அதிகப் பெருமையாகும் என்று Ahmad தெரிவித்தார்.
வளரும் நாடுகளின் உறுப்பு நாடான சீனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடைபெறும். அனைத்து வளரும் நாடுகளைப் பொறுத்த வரை, ஊக்கம் மற்றும் அதிகப் பெருமை இதுவாகும் என்றார் அவர்.

ஒரே உலகம், ஒரே கனவு என்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கருத்துக்கு Ahmad உடன்பாடு தெரிவித்தார். சீனா மற்றும் வங்காளத்தேசத்தின் மக்கள் பொது மேன்மையைக் கொண்டு வருகின்றனர். அருமையான வாழ்க்கைக்கு கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
12ம் நாள் சீனாவின் சிச்சுவான் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சீன மற்றும் உலக மக்கள் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். Jing Gangshan நகரில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில், San Francisco நகரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிர்த் தப்பிய இரண்டு பேர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களுக்கு சிறப்பு வாழ்த்து ஒன்றை வழங்கினர்.

1989ம் ஆண்டு, San Francisco நகரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை தாம் அனுபவித்ததாக சீன சியாங் சிய் ஆசிரியர் பயற்சி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அமெரிக்கர் Brubaker தெரிவித்தார். நிலநடுக்கம் நடைபெற்ற போது, அவர் மாணவராவார். அவரது உற்ற நண்பர் இதில் உயிரிழந்தார். பலர் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர் என்றும் அவர் கூறினார். எனவே, வென் சுவான் நிலநடுக்கத்தை பற்றி கேள்விப்பட்டதும் தான் அதிர்ச்சி அடைந்தாக Brubaker கூறினார்.