சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான பாகிஸ்தானின் முதலாவது மருத்துவக் குழு இன்று காலை Rawalpindi ராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரும் சுகாதார அமைச்சருமான Sherry Rahmanஅம்மையார், பாகிஸ்தானின் தேசிய பேரடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் Farooq Ahmed Khan, பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் Luo Zhaohui முதலியோர் விமான நிலையத்தில் மருத்துவக்குழுவை வழி அனுப்பி வைத்தனர்.
27 மருத்துவர்கள் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். அதிகப்படியான மருந்துகள், மருத்துவ வசதிகள், மருத்துவக் குழுவின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் ஆகியவற்றுடன் இந்த மருத்துவக் குழு, சீனாவின் கான் சூ மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லும்.
|