சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இன்று சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையைத் தொடர்ந்து பார்வையிட்டார்.
26ம் நாள் நண்பகல், சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வூ பாங்கோ சென்றார். அங்குள்ள மக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து, பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை பார்வையிட்டு, தொடர்புடைய பணிகளுக்கு அவர் வழிகாட்டினார். நேற்று, வென்ச்சுவான் yingxiu மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையை பார்வையிட்டு, zipingpu நீர்த்தேக்கத்தின் நிலைமையை அறிந்துகொண்டு, dujiangyan நகரத்தின் xingfuவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுகுடியேற்ற இடத்துக்குச் சென்ற வூ பாங்கோ பொது மக்களை சந்தித்தார்.
|