நிவாரணப் பொருட்களையும் அவற்றையும் உதவித் தொகையையும் பயன்படுத்தும் திட்டத்தை சீன பொது துறை அமைச்சகம் வகுத்துள்ளது. தொடர்புடைய பொருட்கள் மற்றும் உதவித்தொகையின் பயன்பாடு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று சீன பொதுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் yujianliang நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
இது வரை சீனா பெற்றுள்ள குறிப்பிட்ட நன்கொடைகள், வழங்குபவர்களின் விருப்பப்படி ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். பிற நன்கொடைகள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஏற்பாடு செய்து, பேரிடருக்குப் பிந்திய மறுசீரமைப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும். பல்வேறு இடங்கள் முன்பு வழங்கிய நன்கொடைகள் மூலம், கூடாரங்கள், நடமாடும் வீடுகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சிச்சுவான் மாநிலம் மற்றும் பல்வேறு பிரதேசங்கள் பெற்றுள்ளன. சிச்சுவான்,கான்சு, ஷான்சி, சுங்சின் முதலிய மாநிலங்களுக்கும் நகரத்துக்கும் பொது துறை அமைச்சகம் 124 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
|