நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளுக்கான பேரிடர் நீக்க பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற பேரிடர் நீக்கப் பணி பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் சிச்சவான் மாநிலத்தின் நீர் மூலவள துறை இதை அறிவித்தது.
நிலநடுக்கத்துக்கு பின், சீன நீர் மூலவள அமைச்சம் அவசரமாக முழுநாட்டிலிருந்தும் மிகப்பல பணியாளர்களை சிச்சுவானுக்கு அனுப்பியது. அவர்கள் உள்ளூர் பணியாளர்களுடன் ஒத்துழைத்து, 1803 பாதிக்கப்பட்ட நீர்த்தேக்கங்களுக்கு பன்முகங்களிலும் சோதனை செய்த்துள்ளனர். மழை காலத்தில் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்காக, அவை இயங்கும் நீர் மட்டத்தைக் குறைத்து, சீரமைப்புப் பணியை தீவிரமாக்க வேண்டும் என்று கொரப்ப்டடது. தற்போது, 220 நீர்த்தேக்கங்கள் நிகழக்கூடிய அபாயம் நீக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நீர்த்தேக்கங்களுக்கான பேரிடர் நீக்கப் பணி அனைத்தும், ஜுன் 20ம் நாளுக்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிய வருகின்றது.
|