சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், நீர்பற்றாக்குறையின் காரணமாக, சில நெல் வயல்களில் மற்ற பயிர்களை பயிரிடும் நிலைமையாயிற்று இதைச் சமாளிப்பதற்காக, வேளாண் அமைச்சகம், 20 பெரிய ரக விதைத் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அப்பிரதேசங்களுக்கு, ஒரு கோடி கிலோகிராம் எடையுள்ள 40 வகை கலப்பின மக்காச்சோள விதைகளையும், 5 இலட்சம் கிலோகிராம் எடையுள்ள சீனக்கோவா, முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளையும், அவசரமாக அனுப்பியுள்ளது.
அண்மையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வேளாண் வாரியங்கள், சாகுபடிக்கு உதவிட 5500 குழுக்களை அனுப்பியது. முழு மாநிலமும், ஜூன் திங்கள் 5ம் நாளுக்கு முன், அறுவடை மற்றும் பயிரிடுவதை விவசாயிகல் நிறைவேற்ற முடியும்.
நீர் சேமிப்பு வாரியங்களின் அவசர பழுதுபார்ப்பின் மூலம், அண்மையில், பல்வேறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 80 விழுக்காடு பரப்பளவுக்கு நீர் பாசனம், மீட்கப்பட்டுள்ளது.
|