தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 16ஆயிரத்து112ஐ எட்டியுள்ளது. சிறப்பு தொற்று நீக்குதல், தடுப்பு, கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகளின் மூலம், கடும் நோய்கள் இல்லை நிலை உத்தரவாதம் செய்யப்படும். சீனச் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மௌ ச்சுன் ஆன் இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து கிராமங்களிலும், ஒன்றிலிருந்து மூன்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் வரை உள்ளனர். மாவட்டம் மற்றும் வட்டங்களில், இப்பணிக்கு வழிகாட்டுகின்ற தொடர்புடைய நிபுணர்களும் சிறப்புப் பணியாளர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
|