நன்கொடை மற்றும் உதவி வழங்கியுள்ள வெளிநாடுகள்
cri
கடந்த சில நாட்களில் சில நாடுகளின் அரசுகளும் அரசுசாரா நட்பார்ந்த அமைப்புகளும் தொடர்ந்து வேறுபட்ட வடிவங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனச் சிச்சுவான் மாநிலத்திற்கு உதவி வழங்கியுள்ளன. 9ம் நாள் வங்க தேசத்தின் வங்க தேச-சீன மக்கள் நட்புறவுச் சங்கம் சீனாவுக்கு 1500 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியது. சீனச் சிச்சுவானுக்கான பிராங்பர்ட்டின் உதவி என்ற பெயரில் ஜெர்மனின் பிராங்பர்ட்டின் நகரிலுள்ள சர்வதேச நாடக அரங்கில் கலைநிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது. சீனா ஜெர்மனி, ரஷியா மற்றும் அரபு நாடுகளின் பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். அவர்கள் கலை வடிவத்தில் வெச்சவான் நிலநடுக்கத்தில் பலியானவர்களை நினைவு கூர்ந்தனர். இதில் பெறப்பட்ட தொகை அனைத்தும் சிச்சுவான் மாநிலத்தின் மியன் ச்சூ நகருக்கு வழங்கப்படும். இந்தத் தொகை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படும். ஸ்வீடனில் வாழ்கின்ற சீன கலைஞர்களும் ஸ்வீடன் கலைஞர்களும் 8ம் நாள் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இசை நிகவ்ச்சியை நடத்தினர். இதில் பெறப்பட்ட நன்கொடைத் தொகையும் சிச்சுவான் மாநிலத்தின் பிங் வூ மாவட்டத்தின் புஃசியான் துவக்கப் பள்ளியின் புனரமைப்புக்கு வழங்கப்படும்.
|
|