இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 146 கோடி யுவான் தற்காலிக நிதி உதவியை சீன சிச்சுவான் மாநிலம் வழங்கியுள்ளது.
மே திங்கள் 28ம் நாள் முதல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக உதவித் தொகையை சிச்சுவான் மாநிலத்தின் பொதுத் துறை பணியகம், நிதித் துறை மற்றும் உணவு தானிய ஆணையம் வழங்கியுள்ளன. இது வரை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 146 கோடி நிதியுதவி, 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நிலநடுத்தக்கத்தால் பாதிக்கப்பட்ட 51 இலட்சத்து 22 ஆயிரம் பேர் இதன் மூலம் பயன் பெற்றனர் என்று சிச்சுவான் மாநிலத்தின் பொதுத் துறை பணியகத்தின் துணைத் தலைவர் chenkefu நேற்று chengdu நகரத்தில் குறிப்பிட்டார்.
|