பேரிடர் நீக்க மீட்புதவியிலுள்ள சீனப் படைப் பிரிவுகள்
cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களைக் குடியமர்த்துவது, புனரமைப்பு முதலிய பணிகளில் சீனப் படைப் பிரிவுகளும் ஆயுதக் காவற்துறை பிரிவுகளும் தொடர்ந்து ஈடுபடுவர் என்று சீன இராணுவத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள் இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தனர். இன்று சீன அமைச்சரவையின் செய்தி பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்த தகவலை அறிவிக்கப்பட்டது. வரும் நாட்களில் மக்களை குடியமர்த்துவது, காயமுற்ற மக்களுக்கு சிகிச்சை அளிப்பது, நிலநடுக்கத்தால் ஏற்படும் சீற்றங்களை சமாளிப்பது, நிலநடுக்கத்தால் உருவான ஏரிகளின் ஆபத்தை கண்காணித்து நீக்குவது, சுகாதார மற்றும் நோய் தடுப்பு, உள நல உதவி, உற்பத்தி மீட்க மக்களுக்கு உதவுவது முதலிய பணிகளில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் சீனப் படைகளும் ஆயுதக் காவற்துறை யினரும் ஈடுபடுவர் என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூ சாங் மிங் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.
|
|