இன்று காலை 8 மணியளவில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள guiyang நகரத்தில் துவங்கியது.
துவக்க விழா guiyang நகரத்தின் மக்கள் சதுக்கத்தில் நடைபெற்றது. முதலாவது தீபமேந்துபவரும், சீனாவின் சந்திர மண்டல ஆய்வுத் திட்டப்பணியின் முதல் அறிவியலாளருமான ouyangziyuan தீபம் ஏந்தி தொடரோட்டத்தை துவக்கினார். இத்தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் மொத்த நீளம் 16.9 கிலோமீட்டராகும். 208 தீபமேந்துபவர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்கின்றனர்.
|