தற்போது, ஷென்சி மாநிலத்திலான பேரிடர் நீக்கப் பணி, புனரமைப்பு மற்றும் உற்பத்தி மீட்பு கட்டத்தில் நுழைந்தது. அடுத்த 2ஆண்டுகளில், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணி அடிப்படையில் நிறைவேற கூடும் என்று ஷென்சி மாநிலத்தின் துணை தலைவர் Yao Yinliang தெரிவித்தார்.
இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக உறைவிட பிரச்சினையை தீர்ப்பது, பள்ளி மற்றும் கல்வியை மீட்பது, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், நீர்ச் சேமிப்பு, செய்தித்தொடர்பு முதலிய வசதிகளுக்கான பராமரிப்பு மற்றும் புனரமைப்பு ஆகியவை, தற்போது ஷென்சி மாநிலத்தின் பல்வேறு அரசுகளின் முதன்மைப்பணிகளாகும் என்று Yao Yinling கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை கட்டியமைப்பதில் 250கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. தவிரவும், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டிட்டங்களை மீட்க ஷென்சி மாநில அரசு 15கோடி யுவானை ஒதுக்கியுள்ளது என்று தெரிய வருகின்றது.
|