இன்று நண்பகல் 12 மணி வரையான நிலவரப்படி, சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69ஆயிரத்து 170ஆக உயர்ந்துள்ளது.
இன்று சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்கத் தலைமையகத்தின் கோரிக்கைக்கு இணங்க, சீன அரசவையின் செய்தி அலுவலகம் இத்தகவலை அறிவித்தது.
இது வரையில் நிலநடுக்கத்தால், 3லட்சத்து 70ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமுற்றனர். 17ஆயிரத்து 428பேர் காணாமல் போயினர்.
தவிரவும், இன்று நண்பகல் 12 மணி வரை, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 4550 கோடி யுவானுக்கு மேலாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு 1400 கோடி யுவானை தாண்டியுள்ளது. சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் நிவாரணப் பணிக்கு மொத்தம் 5370கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கியுள்ளன.
|