சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இலங்கை அரசு வழங்கிய 1000 கூடாரங்களை சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் He Yafei நேற்று பெய்சிங்கில் ஏற்றுக்கொண்டார். இது, சீனாவுக்கான இலங்கையின் 2வது தொகுதி நன்கொடையாகும்.
லநடுக்கத்துக்கு பின், இலங்கை அரசும் மக்களும் பல்வேறு வழிமுறைகளின் மூலம், சீன அரசுக்கும் மக்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தன என்று சீனாவிலுள்ள இலங்கை தூதர் H.E.Mr.Karunatilaka Amunugama கூறினார். இந்த நன்கொடை பேரிடர் நீக்கப் பணிக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். சீன அரசின் தலைமையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இன்னல்களை சீன மக்கள் சமாளிப்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|