நன்கொடை தொகையைப் பயன்படுத்துவது பற்றிய ஆலோசனை
cri
வென் சுவான் நிலநடுக்கத்துக்கான பேரிடர் நீக்கப் பணியில் நன்கொடைத் தொகையைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளை சீன அரசு இன்று வெளியிட்டது. சி ச்சுவான், கான் சு, ஷான் சி, சுங் சிங், யுன்னான் ஆகிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களில் இத்தொகை முழுவதும் பயன்படுத்தப்படும். மக்களின் வாழ்க்கையை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்ம். முறையே, விவசாயிகளின் வீடுகளைப் புனரமைப்பது, பள்ளி, மருத்துவமனை முதலிய பொது சேவை வசதிகளின் கட்டுமானம், மிகவும் இன்னலுக்குள்ளாகிய மக்கள், அனாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், ஊனமுற்றோர் ஆகிய தேவை கொண்ட சிறப்பு மக்களுக்கான வாழ்க்கை உதவி தொகை, கிராமப்புறப் பிரதேசங்களில் பாதை, பாலம் முதலிய அடிப்படை வசதிகளின் கட்டுமானம் ஆகியவற்றில் இத்தொகை பயன்படுத்தப்படும். இத்தொகை பாதுகாப்பாகவும் பயன் தரும் முறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், நன்கொடைத்யின் மூலதனம், அளவு, நன்கொடைத் வழங்குபவரின் விருப்பம் முதலியவற்றையும் பொதுத் துறை வாரியங்கள் தொகுத்து உரிய நேரத்தில் சமூகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று இந்த ஆவணம் சுட்டிக்காட்டியது.
|
|