இன்று நண்பகல் 12மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் பேரிடர் நீக்கப் பணிக்கு ஒதுக்கியுள்ள நிதித்தொகை, 5386கோடியே 40லட்சம் யுவானாகும். சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 4570கோடி யுவானுக்கு மேலாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1420கோடி யுவான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இன்று இத்தகவலை அறிவித்தது.
இன்று நண்பகல் 12மணி வரையான நிலவரப்பிடி ,69ஆயிரத்து170பேர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 17ஆயிரத்து 426பேர் காணாமல் போயினர். காயமடைந்த 14ஆயிரத்து 94 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
தவிர, நேற்று வரை, நிலநடுக்கத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்ட 50லட்சம் யுவானுக்கு மேலான வருமானமுடைய 5600தொழிற்ல் நிறுவனங்களில் 80விழுக்காட்டுக்கு மேலானவை உற்பத்தியை மீட்டுள்ளன.
|