சிச் சுவான் மாநிலத்தின் வென்ச் சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்புப் பணிக்கு நேரடி உதவி அளிக்கும் வகையில், பெய்சிங், ஷாங்காய், குவான் துங், சியாங் சு முதலிய 19 மாநில மற்றும் நகரங்களை உதவியளிக்கும் தரப்பாக, சீன அரசு உறுதிப்படுத்தியுள்ளது. உதவிக் காலம் 3 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுள்ளது
இன்று சீன அரசு இணையத்தில், அரசவையின் புனரமைப்புத் திட்டம் வெளியிடப்பட்டது. சிச் சுவான் மாநிலத்தின் 18 மாவட்டங்கள், கான் சூ மற்றும் ஷான் சி மாநிலங்களின் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகியவை, உதவி வழங்கப்படும் தரப்புகளாக இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. ஒரு மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்துக்கு உதவிடும் கோட்பாட்டுக்கு இணங்க, கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களின் மாநிலங்களும் நகரங்களும் உதவி வழங்குவதை, நடுவண் அரசு ஏற்பாடு செய்யும்.
தவிர, உதவி வழங்கும் அம்சங்களும் வழிமுறையும் இத்திட்டத்தில் விதிக்கப்படுள்ளன. புனரமைப்புத் திட்டத்தை வகுப்பது, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் உறைவிடங்களை கட்டி, செப்பனிடுவது, பள்ளிகள், மருத்துவ மனைகள முதலிய பொது சேவை வசதிகளை கட்டியமைப்பது ஆகியவை உதவி அம்சங்களில் அடங்குகின்றன.
|