
சீனாவின் மையப்பகுதியிலுள்ள He nan மாநிலத்தின் சின் யாங் நகரில் நான்வான் ஏரி அமைந்துள்ளது. இவ்வியற்கைக் காட்சி மண்டலம், மலை, ஏரி, காடு, தீவு ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், புகழ்பெற்றது. அதில் 61 தீவுகள் அமைந்துள்ளன. பறவைத் தீவில், எங்கெங்கும் பறவைகளைக் காணலாம். அவற்றின் ஒலியைக் கேட்கலாம். ஆண்டுதோறும், சுமார் ஒரு லட்சம் இடம்பெயரும் பறவைகள், இங்கு வந்து செல்கின்றன. நான்வான் ஏரி, இயற்கையான உயிர்வாயு அகம் ஆகும். அதன் மொத்த பரப்பளவில், காட்டு பரவல், 75 விழுக்காடு வகித்துள்ளது. படகு மூலம், நான்வான் ஏரியைப் பார்வையிட்டு, ஏரியிலுள்ள பல தீவுகளைப் பார்க்கலாம். இங்கு இயற்கைக் காட்சி மிகவும் அழகானது.

நான்வான் ஏரி, உலகில் எழில் மிக்க இயற்கைக்காட்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும். எனவே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அது, எவ்வளவோ அறிஞர்களையும் கவிஞர்களையும் தனது அழகால் மயக்கமுற செய்துள்ளது. இப்போது, விடுமுறையைப் பயன்படுத்தி, பல பயணிகள், நான்வான் ஏரிக்கு சிறப்பாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள்.

|