• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-25 15:04:32    
ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவுக்கு பிரியாவிடை

cri

கடந்த ஜுன் திங்கள் முதலாம் நாள், நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குழந்தைகளைப் பொறுத்த வரை, சிறப்பு குழந்தைகள் தினமாகும். அன்று, சிச்சுவான் மாநிலத்தின் Peng Zhou நகரில், நிலநடுக்கம் நிகழ்ந்த பின், நீண்டகாலம் கேட்காத குழந்தைகளின் பாடலொலிகள் மீண்டும் ஒலிக்கின்றன. அடுத்தடுத்து 11 நாட்களாக சிச்சுவான் மாநிலத்தில் மருத்துவ மீட்புதவிப் பணியில் ஈடுபட்ட ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவுக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பிய போது, அவர்கள், தங்கள் பாடல்கள் மூலம் குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மே திங்கள் 20ஆம் நாள் முதல், ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவினர்கள் தொகுதி தொகுதியாக சிச்சுவான் மாநிலத்தின் Peng Zhou நகர் சென்றடைந்தனர். மே திங்கள் 12ஆம் நாள் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுழைந்த முதலாவது தொகுதி வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை குழுவினர் அவர்களே. 11 நாட்கள் மருத்துவ சிகிச்சை பணியில் ஈடுபட்ட பின், ஜுன் திங்கள் முதலாம் நாள் இரவு அம்மருத்துவ சிகிச்சை குழு நாடு திரும்பியது.

அன்று பிற்பகல், Peng Zhou நகரில், இம்மருத்துவ சிகிச்சை குழுவுக்கு பிரியாவிடை விழா நடைபெற்றது.

He Hua Wei என்னும் சிறுவருக்கு வயது 11. நிலநடுக்கத்தில் அவரது இடது காலும், தலையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து, தமக்கு அறுவை சிகிச்சை அளித்த ரஷிய மருத்துவர்களை அன்பாக மாமா என்று அழைத்து நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"எனதன்பு ரஷிய மாமாக்கள் நீங்கள் அளித்த சிகிச்சையினால், நான் விரைவாக குணமடைகின்றேன். இனி, உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்வியில் தலைசிறந்த மதிப்பெண் பெறுவேன்" என்றார், அவர்.

10 வயதான சிறுமி Dong Yao, குழந்தைக்குரிய குரலோடு பாடிய மழலை பாடலில், ரஷிய மருத்துவர்களுக்கான நன்றி உணர்வை வெளிப்படுத்தினார். அவர் பாடியதாவது:

"நன்றி மறவா உள்ளத்துடன்

தங்கள் உதவிக்கு நன்றி தெரிவிக்கின்றேன்"

விழாவில் Peng Zhou நகரின் மேயர் Han Yi, Peng Zhou நகர் அரசு மற்றும் 7 இலட்சத்து 80 ஆயிரம் நகரவாசிகளின் சார்பில், ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவுக்கு உளமார்ந்த நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பேரழிவு ஏற்பட்ட பின், ரஷிய மருத்துவ சிகிச்சை குழு தொலைதூரத்திலிருந்து Peng Zhou நகருக்கு வந்தது. இன்னல் மிகுந்த நிலையில், Peng Zhou நகரில் ஆயிரத்து 500க்கு அதிகமான காயமுற்றோருக்கு சிகிச்சை அளித்துள்ளது. இது, சர்வதேச மனித நேய எழுச்சியை வெளிப்படுத்தும் அதே வேளையில், சீன-ரஷிய உத்திநோக்கு கூட்டாளியுறவின் உயர் நிலையையும், சீன மக்கள் மீது ரஷிய மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் காட்டியுள்ளது" என்றார், அவர்.

ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவின் துணைத் தலைவர் Ivanius Alexander பேசுகையில், பத்துக்கு அதிகமான நாட்களாக சிகிச்சை அளிக்கும் பணியில், ரஷிய மருத்துவ சிகிச்சை குழு, சீன மக்களுடன் ஆழ்ந்த நட்புறவை உருவாக்கியுள்ளதாக கூறினார். சீன மக்கள் ஒன்றுபட்டு, விரைவில் இன்னல்களைச் சமாளித்து, தாயகத்தை மறுசீரமைப்பது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"நிலநடுக்கம், எந்த நாட்டையும், மக்களையும் பொறுத்த வரை தவிர்க்கப்பட முடியாத இயற்கை சீற்றமாகும். நாம் ஒன்றுபடும் போது தான், சீற்றத்தினால் ஏற்பட்ட விளைவை இயன்ற அளவில் குறைக்க முடியும். நாங்கள் என்றுமே உங்களுடன் இணைந்து இருக்கின்றோம்" என்றார், அவர்.

ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவின் மற்றொரு துணைத் தலைவர் Shabanov Valeli பேசுகையில், சீனாவிலும் ரஷியாவிலும் இடர்ப்பாடு மனிதரை உரசிபார்க்கும் உண்மையான உரைக்கல்லாகும் என்ற ஒரு பழமொழி பரவி வருகின்றது என்று கூறினார். அவர் கூறியதாவது:

"சிச்சுவான் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மக்கள் இன்பமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து, மலர்ந்த முகங்களோடு குழந்தைகள் வளரவும், சீற்றத்துக்கு பின், சிச்சுவான் மாநிலம் தொடர்ந்து செழிப்பாக வளரவும் வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார், அவர்.

உள்ளூர் பிரதேசத்தில் காயமுற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, பிரியாவிடை விழாவில், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துகளை ரஷிய மருத்துவ சிகிச்சை குழு Peng Zhou நகரின் செஞ்சிலுவை மருத்துவ மனைக்கு வழங்கியது.