மேம்படுத்தப்பட்ட காற்று தரம்
cri
ஜுலை திங்களில், பெய்ஜிங் மாநகரில் காற்று மாசுப்படுத்தல் பற்றிய குறியீட்டு எண் சராசரியாக கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 20 விழுக்காடு குறைந்துள்ளது. காற்றில், மாசுப் பொருட்களின் அளவும் தெளிவாகக் குறைந்துள்ளது. இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பெய்ஜிங் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் Du shao zhong இவ்வாறு தெரிவித்தார். கடந்த சுமார் 20 நாட்களில் பெய்ஜிங்கில் காற்றுத் தரம் தெளிவாக மேம்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் போது காற்றுத் தரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தெளிவான பயன் பெறத் துவங்கியது என்று அவர் கூறினார். ஜுலை திங்கள் முதல் நாள் தொடக்கம், சாலைகளில் செல்லும் கார்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவது, கடும் காற்று மாசுபடுத்தலை ஏற்படுத்தும் திட்டப்பணிகளை நிறுத்துவது, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது முதலிய நடவடிக்கைகள் பெய்ஜிங்கில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
|
|