ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் பெய்ஜிங்
cri
இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 4வது நாளாகும். இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த பெய்ஜிங் மாநகரம் முழுமையாக தயார் செய்துள்ளது என்று பெய்ஜிங் மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் லியு ச்சி இன்று பெய்ஜிங்கில் கூறினார். கடந்த திங்கள் 20ம் நாள் முதல் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, 3 நிலத்தடி தொடர்வண்டி நெறிகளையும் 34 சிறப்பு ஒலிம்பிக் பேருந்து நெறிகளையும் பெய்ஜிங் நகரம் புதிதாக திறந்துள்ளது. மேலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பல்வேறு ஹோட்டல்கள் 6 இலட்சத்து 65 ஆயிரம் படுக்கை வசதிகளை வழங்கலாம். எரியாற்றல், உணவு பொருள் பாதுகாப்பு, மருத்துவச் சேவை முதலிய துறைகளில் பெய்ஜிங் சிறப்பாக தயார் செய்துள்ளது. பெய்ஜிங் மாநகரின் காற்றுத் தரம் கடந்த ஒரு வாரம் காலமாக வரையறைக்கு ஏற்றதாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று லியு ச்சி தெரிவித்தார். ஒலிம்பிக் அறிவுகளையும் பல்வேறு நாடுகளின் பழக்க வழக்கங்களையும் பெய்ஜிங் மாநகரவாசிகள் கற்றுக்கொண்டு, பல்வேறு இடங்களிலிருந்து வரும் விருந்தினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பர் என்றும் அவர் கூறினார்.
|
|