ஒலிம்பிக் துவக்க விழா கலை நிகழ்ச்சி சீனாவின் பண்பாட்டை முழுமையாக வெளிகாட்டியுள்ளது. நான் கண்டது சீனப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீனா வெளிப்படுத்தும் அமைதி, இணக்கம் மற்றும் பரஸ்பரம் மதிப்பளிப்பு என்ற முக்கிய கருத்துக்களே இந்நிகழ்ச்சியில் வெளிகாட்டப்பட்டுள்ளன என்றார் அவர்.
இப்போது பெய்ஜிங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் தவிர, 80க்கு மேலான நாடுகளின் மதிப்புக்குரிய விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ்.W. புஷ், ஜப்பான் தலைமை அமைச்சர் புஃகுடா யாசோ, இஸ்ரேல் அரசுத் தலைவர் சிமோன் பெரேஸ், ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் கெவின்ரட் முதலிய தலைவர்கள் இவர்களில் அடங்குவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் பிரதிநிதிக் குழுக்களின் எண்ணிக்கையும் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமானது. 205 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுக்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தங்களது பிரதிநிதிக் குழுக்களை அனுப்பியுள்ளன. இதனால் ஒலிம்பிக் வரலாற்றில் பிரதிநிதிக் குழுக்களின் எண்ணிக்கை இந்த முறை மிக அதிகமாகும்.
அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரேசில், தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா முதலிய நாடுகளின் ஒலிம்பிக் குழுக்கள் தத்தமது வரலாற்றில் மிகப் பெரிய பிரதிநிதிக் குழுவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்த முறையிலும் செய்யாத முறையிலும் 30 ஆயிரம் செய்தியாளர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி அறிவிக்கிறார்கள்.
புள்ளிவிபரங்களின் படி உலகில் 400 கோடி மக்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒரே நேரத்தில் கண்டு இரசிப்பர். 5400 மணி நேரம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி உலக மக்களுக்கு அறிவிக்கப்படும். இணைய தளம், செல்லிடப்பேசி முதலிய முன்னேறிய வழிமுறைகளின் மூலம் அவர்கள் ஒலிம்பிக் விலையாட்டுப் போட்டிகளை கண்டும் கேட்டும் இரசிப்பர். 1 2
|