
தென் பக்கத்தில் காற்களைக் குறுக்காக வைத்துவிட்டு அமரும் ஒரு மூதாட்டியின் உருவச் சிலை காணப்படலாம். அவருடைய உடையில், சீனாவின் பாரம்பரிய மகளிர் தனிச்சிறப்பு தென்படுகின்றது. அவருடைய பெயர் சான்நியாங். அவருக்கு முன் பக்கத்தில் 3 சிறிய கற்கள் உள்ளன.

இவை, அவருடைய 3 மகன்களாகும். நன்றாகக் கல்வி கற்குமாறு, தம் குழந்தைகளுக்கு சான்நியாங் அறிவுரை கூறுகிறார் என்பது தெரிகின்றது. இதனால் இக்காட்சித் தலத்தின் பெயர், சான்நியாங் மகன்களுக்கு அறிவுரை கூறுவதென்பதாகும். தாச்சியென் ஏரியில் காட்டு வாத்துக்கள் உள்ளன.

நாள்தோறும் அதிகாலையில், அவை இந்த ஏரிக்கு வந்து, அந்திப்பொழுதில் வீடு திரும்புகின்றன. ச்சியௌசுவின் எழில் மிக்க இயற்கை காட்சி அவற்றையும் ஈர்த்துள்ளதாம்.
|