பெய்சிங்கை வந்தடைந்த முதல் ஊனமுற்றோர் பிரதிநிதிக் குழு பெய்சிங் நேரப்படி, இன்று காலை 5.45மணிக்கு, 78பேர் இடம்பெறும் உக்ரைன் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் பிரதிநிதிக் குழு பெய்சிங் மாநகரத்தை வந்தடைந்தது. 8 நிமிடத்திற்கு குறைவான நேரத்தில், பெய்சிங் எல்லை நுழைவு மற்றும் வெளியேற்ற தலைமை பரிசோதனைச் சாவடியினர் இவர்களது நுழைவு ஒழுங்கு முறையைக் கையாண்டனர். இது, பெய்சிங்கிற்கு வந்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிக்கான முதல் வெளிநாட்டு குழுவாகும். நீச்சல், மேசை பந்து, பளுதூக்குதல் முதலிய விளையாட்டுகளில் பங்கெடுக்கும் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள், இந்த குழுவில், உள்ளனர்.
|