ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், பெய்ஜிங் மாநகரின் உபசரிப்பு நிலைமைப்படி, பல்வேறு உபசரிப்புச் சேவைப் பணிகளை பெய்ஜிங் செவ்வனே நிறைவேற்றி வருகிறது. இன்று பெய்ஜிங் மாநகரின் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் xiongyumei பெய்ஜிங் சர்வதேச செய்தி மையத்தில் நடைபெற்ற பெய்ஜிங் சுற்றுலா காட்சி தலத்தின் உபசரிப்பு நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 20ம் நாள், பெய்ஜிங் மாநகரின் 164 காட்சி தலங்கள் சுமார் 48 இலட்சம் மக்களை உபசரித்துள்ளன. அரண்மனை காட்சியகம், கோடை மாளிகை, சொர்க்க ஆலையம், பெருஞ்சுவர் உள்ளிட்ட 21 காட்சி தலங்கள், 20 நாடுகளின் ஏறக்குறைய ஆயிரம் மதிப்புக்குரிய விருந்தினர்களை உபசரித்துள்ளன என்று அவர் கூறினார். ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி பற்றிய ஆயத்தப் பணியையும் அவர் எடுத்துக்கூறினார்.
|