
யுன்செ பூங்கா குவெய்சோ மாநிலத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை தர விரும்பும் இடம் இது. இப்பூங்காவின் நுழைவாயிலிருந்து தொடங்கி, ஜல்லி கல்லாலான ஒற்றைப் பாதை வழியாக செல்லும் போது, பக்கத்தில் தேவதாரு உள்ளிட்ட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களைக் காணலாம். வளர்கின்றன. பறவைகளின் பாட்டொலி கேட்கலாம்.

சறசறவென்று ஓடும் நீர், விலங்குகள் புல் தரையில் பாய்ந்துசெல்வது ஆகியவற்றையும் காணலாம். பூங்காவில், நடைப்பாதை, பயணிகள் ஓய்வு எடுக்கும் கூடார மண்டபம் ஆகியவை தவிர, செயற்கைக் கட்டடம் ஏதும் இல்லை. யுன்செ வனப் பூங்காவின் பரப்பளவு, 24 சதுர கிலோமீட்டர். முன்பு, ஒரு மரப் பண்ணையாக இருந்தது. 2002ஆம் ஆண்டு இப்பூங்கா கட்டியமைக்கப்பட்டது. அப்போது, நடைப்பாதையை அமைப்பதற்காக, சில மரங்களை வெட்ட நேரிட்டது. தேவைக்கு அதிகமாக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்பூங்காவில், வட வண்டி இல்லை. கடையில்லை. பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி இல்லை. குப்பைக் கூளப்பெட்டி கூட மரத்துண்டால் ஆனது. இதனால், பூங்காவின் அடிப்படை வசதியும் இயற்கைச் சூழலும் பின்னிப் பிணைந்துள்ளன.

|