2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் இன்று லியாவ் நிங் மாநிலத்தின் தாலியன் நகரில் நிறைவடைந்தது. மொத்தம் 70 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் 14பேர் ஊனமுற்றோர் ஆவர். இதன் முழு நீளம் 3.8கிலோமீட்டராகும்.
பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம், பண்டைய சீனா, நவீன சீனா என்று அழைக்கப்படும் இரு நெறிகளில் நடைபெற்று வருகிறது. அவை, கடந்த திங்கள் 29ம் நாள் தொடக்கம் சீனாவின் 11 நகரங்களில் நடைபெறுன்றன. செப்டம்பர் 5ம் நாள், அவை பெய்சிங்கில் இணைந்து ஒரே தீபத் தொடரோட்டமாக நடைபெறும் என்று தெரிய வருகிறது.
நாளை, பண்டைய சீனா எனும் நெறியிலான தீபத் தொடரோட்டம் ஹெநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெறும்.
|