• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 09:47:40    
நீ என்னை ஏமாற்றினால் நான் உன்னை ஏமாற்றுவேன்

cri
சீன மொழியில் Er yu wo zha என்றால், நீ என்னை ஏமாற்றினால் நான் உன்னை ஏமாற்றுவேன் என்று பொருள். இந்த் அமரபுத் தொடரின் பின்னணியிலுள்ள ஒரு கதை உங்களுக்காக.
கி.மு 594ம் ஆண்டில், ச்சூ(chu) நாட்டு படைகள் சுங் (song) நாட்டை எதிர்த்து தாக்குதல் நடத்தின. ஆனால் வெற்றி எளிதில் கிடைக்காமல் போர் நீண்டுகொண்டிருந்தது. முடிவேயில்லாத முயற்சியாக இந்த போர் நீண்டுகொண்டிருந்த நிலையில், நீண்ட நெடிய போருக்கு தாங்கள் ஆயத்தம் செய்வதை எதிரி நாட்டுக்கு உணர்த்த படையெடுப்பை மேற்கொண்ட ச்சூ(chu) நாட்டு படைகள், வீடுகளை கட்டியெழுப்பவும், நிலத்தை உழுது பயிரிடவும் தொடங்கினர். நடப்பதையெல்லாம் கண்ட சுங் (song) நாட்டு அரசனுக்கு கலக்கம் ஏற்பட்டது. தனது மூத்த படைத்தளபதிகளில் ஒருவரான ஹுவா யுவானை (hua yuan) ச்சூ(chu) நாட்டு படை முகாமுக்கு இரவு வேளையில் வேவு பார்க்க அனுப்பினான். ஹுவா யுவானும் (hua yuan) எதிரியின் படை முகாமுக்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த ச்சூ(chu) நாட்டு தலைமை படைத் தளபதியான ட்சு ஃபானிடம் (zi fan), சுங் (song) நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது, என்றாலும் சுங் (song) நாட்டு மக்கள், உயிர் விடுவார்களே ஒழிய சரணடைய மாட்டார்கள் என்றான். இருப்பினும், சுங் (song) நாட்டு படை ஒரு 15 கிலோ மீட்டர் பின்வலித்துக்கொண்டால், இருதரப்புக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறினான் சுங் (song) நாட்டு படைத்தளபதி ஹுவா யுவான் (hua yuan). இந்த முன்மொழிவை ஏற்ற ச்சூ(chu) நாட்டு படைகள், சொன்னபடி பின்வலித்துக்கொண்டன. இதைத் தொடர்ந்து ச்சூ(chu) நாட்டு அரசனுக்கும், சுங் (song) நாட்டு அரசனுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் உன்னை ஏமாற்றமாட்டேன், நீயும் என்னை ஏமாற்றக்கூடாது என்று இருதரப்புகளும் வாக்குறுதி கூறின. இந்தப் போக்கில் சுங் (song) நாட்டு படைத்தளபதி ஹுவா யுவான் (hua yuan) தன்னையே பிணைக்கைதியாக ச்சூ (chu) நாட்டிடம் ஒப்படைத்தான், இரு நாடுகளுக்குமிடையிலான போர் முடிவுக்கு வந்தது. பின்னாளில், ஒப்பந்தத்தில் இருதரப்புகளும் அளித்த வாக்குறுதியான "நான் உன்னை ஏமாற்றமாட்டேன், நீயும் என்னை ஏமாற்றக்கூடாது" என்பதன் மறு வடிவாக, நீ என்னை ஏமாற்றினால் நான் உன்னை ஏமாற்றுவேன் Er yu wo zha என்ற மரபுத்தொடர் வழக்கில் வந்தது. ஒருவர் மற்றவரை ஏமாற்றும், ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்ளும் மக்களை குறிக்கும் போது இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.