
ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் ழஹய் ஏரிக்கு வருகை தந்த போதிலும், இவ்வேரி நீரின் தூய்மை சிறிதளவேனும் பாதிக்கப்படவில்லை. இது, சுற்றுலா மூல வளத்தைப் பயன்படுத்தும் அதே வேளையில், உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாத்துள்ள da li அரசுக்கு உரியது.
 கடந்த 2 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் da li அரசு அதிக பணி மேற்கொண்டுள்ளது என்று da li சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹயிசுவன் கூறினார். ழஹய் ஏரியைப் பாதுகாக்கும் பொருட்டு, இவ்வேரியில் போய்வரும் சுற்றுலா படகுகளின் எண்ணிக்கையை அரசு கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்துகின்றது. அதாவது, அது 5ஐத் தாண்டக் கூடாது. மீன் பிடிப்பு, இவ்வேரியின் உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதால், இது குறித்து, மீன் பிடி தடுப்புக் காலம் வகுக்கப்பட்டுள்ளது. சில மீன் பிடி கருவிகள் பயன்படுத்தபடக் கூடாது. பயணிகள், படகில், ழஹய் ஏரியின் எழில் மிக்க இயற்கை காட்சியையும் விருந்தோம்பல் மிக்க பெய் இன நங்கை, பயணிகளுக்கென ஆடும் 3 சுவை தேநீர் தயாரிப்பு நடனத்தையும் கண்டுகளிக்கலாம்.

|