• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-22 09:16:00    
முப்பகுதி சட்டம்

cri
கிமு 206 ஆம் ஆண்டில் ச்சின் வம்ச பேரரசான ஸு யிங் போரில் தோல்வியடைந்து, அரச எதிர்ப்பு போர் தொடுத்த போராளிக்கூட்டத்தின் தலைவனான லியு பாங்கிடம் சரணடைந்தார். ச்சின் நாட்டின் தலைநகரான ஷியன்யாங்கில் வெற்றி புன்னகையோடு நுழைந்தான் லியு பாங். அரச மாளிகையில் ஒரு புறம் பொன்னும் பொருளும் குவிந்து கிடக்க, மறுபுறம் அழகான பெண்கள் நிறைந்து காணப்பட்டனர். ஆக லியு பாங்கின் மனம் அங்கேயே தங்கிவிட நினைத்தது. லியு பாங்கின் எண்ணத்தின் முடிவை ஊகம் செய்துகொண்ட அவனது ஆலொசகர்களான ஷாங் லியாங்கும், ஃபான் குவாயும் மகிழ்ச்சிக்கும் ஆடம்பரத்துக்கும் மனதை தொலைத்துவிடாதிருக்கும்படி லியு பாங்கை வலியுறுத்தினர். அவன் அப்படிச் செய்தால் அவனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களின் பின்னணி பலத்தை, ஆதரவுக்கரத்தை இழக்க நேரிடும் என்று விளக்கினர். தனது ஆலோசகர்கள் கூறியதை கேட்ட லியு பாங் உல்லாச வசதிகள் நிறைந்த ஷியன்யாங்கை விட்டு தன் படைகளோடு தங்கச் சென்றான். பின் உள்ளூர் தலைவர்கள், மூத்தவர்கள் ஆகிய பெரிய மனிதர்களை வரவழைத்த லியு பாங், ச்சின் வம்ச ஆட்சியின் கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கு நீங்கள் நீண்ட காலம் முகங்கொடுத்துவிட்டீர்கள். இனி நான் தான் குவாங்ஷுங்கை ஆளப்போகிறேன். எனவே இனி முப்பகுதி சட்டமொன்றை நீங்கள் கடைபிடிக்க நான் ஆணையிடுகிறேன். கொலை செய்வோர், மரண தண்டனை விதிக்கப்படுவர். காயப்படுத்துவோர் உரிய முறையில் தண்டிக்கப்படுவர். திருட்டு கொள்ளையில் ஈடுபடுவோர் குற்றஞ்சாட்டப்படு வழக்காடப்படுவர். ச்சின் வம்சத்தின் மற்ற அனைத்து சட்டங்களும் நீக்கப்பட்டு, ஒழிக்கப்படும் என்று அறிவித்தான். அதன் பிறகு உள்ளூர் அதிகாரிகள் இந்த முப்பகுதி சட்டத்தை மக்களிடையே பரவச்செய்தனர். பின்னாளில் லியு பாங்கின் பின் மக்கள் கூட்டம் அணிதிரண்ட ச்சின் மக்கள் அவனுக்கு பெரும் ஆதரவை வழங்கினர். சுருக்கமான ஆனால் தீர்க்கமும், இலக்கை அடையும் சட்டம், விதி ஆகியவை மக்களால் வரவேற்கப்படுவதில் வியப்பேதுமில்லைதானே.