• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-29 10:31:31    
வாள் நடனம்

cri

முந்தைய கதையில் நாயகனாக நாம் குறிப்பிட்ட, ச்சின் வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டிய முக்கிய நபரான லியு பாங்குவான்ஷுங் பகுதிக்குள் நுழைந்த நேரம். அங்கே பாசாங் எனுமிடத்தில் ஒரு லட்சம் படையினரை நிறுத்திவைத்தான் லியு பாங். ஆனால் அங்கிருந்து ஒரு 20 கிலோ மீட்டர் தொலைவில், மற்றொரு போராளிக்குழுத் தலைவனாகிய ஷியாங் யு, 4 லட்சம் படையினரோடு ஹொங்மென்னில் நிலைகொண்டிருந்தான். இது ஏறக்குறைய ஒரு படைகளுக்குமிடையிலான ஒரு போர்ச்சூழல் நிலைபோல் அமைந்தது. லியு பாங்கின் படைகளை ஒரே பெருத்த ராணுவ நகர்வில் நொறுக்கி வீழ்த்த ஷியாங் யு திட்டமிட்டபோது, அவனது மாமனான ஷியாங் போ, லியு பாங்கின் படை முகாமுக்குள் ரகசியமாய் நுழைந்து லியு பாங்கின் ஆலோசகரும் தனது நண்பருமான ஷாங் லியாங்கிடம் வாய்ப்பு கிடைத்தால், வருகின்ற ஆபத்துக்குள் சிக்காமல் ஓடிப்போகும்படி வலியுறுத்தினான். ஆனால் ஷாங் லியாங்கோ நண்பன் சொன்னதை ஏற்க மறுத்ததோடு, நண்பன் ஷியாங் போவை லியு பாங்கிற்கு அறிமுகமும் செய்து வைத்தான். ஷியாங் போ யாரென்று அறிந்த லியு பாங், மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றதோடு, முடிந்தால் அவரது மருமகன் ஷியாங் யுவுக்கும் தன்க்கும் இடையில் அமைதி உடன்படிக்கை எட்ட உதவும்படியும் கோரினான். தன் பிள்ளைகளுக்கு அவரது பிள்ளைகளுக்கும் இடையில் திருமணம் முடிக்கக்கூட இணங்கினான் லியு பாங்.


அடுத்த நாள் ஷியாங் யுவின் படைகள் இருந்த ஹொன்மென்னுக்கு சென்றான் லியு பாங். அவனுடன் ஷாங் லியாங்கும், 100 குதிரைவீரர்களும் உடன் சென்றனர். அன்று இரவு விருந்தொன்றில், ஷியாங் யுவின் மூத்த ஆலோசகரான ஃபான் ஷெங், இந்த வாய்ப்பை சாதகாமாக்கி லியு பாங்கை கொன்றுவிடலாம் என்று ஷியாங் யுவிடம் மூன்று முறை ஆலோசனை வழங்கினான், ஆனால் எல்லாம் வீணானது. அதன் பின் ஷியாங் ஷுவாங் என்ற வீரனை அழைத்து வாள் நடனம் ஆடச்சொன்னான் ஷியாங் யுவின் ஆலோசகன் ஃபான் ஷெங். நடனத்தின் நடுவே லியு பாங்கை இலக்கு வைத்து அவன் கொன்றுவிடவேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் வாள் நடனமாட ஷியாங் ஷுவாங் தயாரானபோது, ஷியாங் போ, இதில் ஏது சூழ்ச்சி இருக்கிறது என்று உணர்ந்து தனது வாளை உருவிக்கொண்டு தானும் எழுந்து வாள் நடனமாடியவனோடு இணைந்து நடனமாடினான. அதன் மூலம் அமைதி நோக்கத்தில் வந்த லியு பாங்கை பாதுகாக்கவும் செய்தான். அதன் பின் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த லியு பாங், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு விருந்தை விட்டு விலகி தப்பினான். நடனம் ஆடி மகிழ்விக்கிறேன் பேர்வழி என்று கழுத்தை வெட்டும் இந்த சூழ்ச்சியை நாம் என்ன சொல்ல.