வெட்டுகிற கத்தி, வெட்டப்படும் மீன்
cri
சென்ற கதையின் அடுத்த பகுதியாக இந்தக் கதை... ஹொங்மென் விருந்தில் தனது உயிருக்கு உலை வைக்க வாள் நடனம் நிகழ்ந்ததை உணர்ந்து, ஒரு வழியாக தப்பித்த லியு பாங், தனது ஆலோசகன் ஃபான் குவாயையும் உடம் அழைத்துச் சென்றான். அப்போது ஃபான் குவாயை பார்த்து நான் வரும்போது விருந்தளித்த ஷியாங் யுவிடம் சொல்லாமல் வந்துவிட்டேன். நானோ உயிர் பிழைக்க தப்பித்தாகவேண்டும் ஆனால் எப்படி நான் இதுபோல் சொல்லாமல் கொள்ளாமல், இங்கிதமின்றி காட்டுத்தனமாக நடந்துகொள்ள முடியும் என்று கூறினான் லியு பாங். இதைக் கேட்ட ஃபான் குவாய், ஒரு பெரிய செயலுக்காக இங்கிதம், நடத்தை போன்ற சின்னஞ்சிறு விடயங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது.ஷியாங் யுவும் அவனது படைகளும் வெட்டுகிற கத்தி மற்றும் பலகை போல, நாமோ வெட்டப்படும் மீனும் இறைச்சியும் போல. ஆக ஏன் விழாவுக்காய் காத்திருப்பது? என்று கேட்டான். ஃபான் குவாய் சொன்னதன் உள்ளார்ந்த பொருளை உணர்ந்த பியு பாங், உடனே ஹொங்மென்னிலிருந்து ஃபான் குவாய் மற்றும் மூன்று வீரர்களோடு நடந்தே தனது முகாமுக்கு சென்றானாம்.
|
|