• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-12 09:55:51    
2008ம் ஆண்டு ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பை

cri


2008ம் ஆண்டு தொழில்முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டி 8ம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஷாங்காய் இப்போட்டியை நடத்துவது இதுவே இறுதி முறையாகும்.

ஸ்விட்சர்லாந்தின் வீரர் Federer, செர்பிய வீரர் Djokovic, பிரிட்டன் வீரர் Murray, ரஷிய வீரர் Davydenko, அமெரிக்க வீரர் Roddick, அர்ஜென்டீன வீரர் Del Potro, பிரான்ஸ் வீரர் Tsonga, அவரது சக நாட்டவர் Simon ஆகிய 8 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். உடல் நல குறைவால், உலக தரவரிசையில் முதல் இடத்தை பெற்றிருக்கும் ஸ்பானிய வீரர் Nadal இப்போட்டியிலிருந்து விலகினார். Nadalக்கு பதிலாக Simon இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

ஆடவர் தொழில் முறை டென்னிஸின் அதிவுயர் போட்டி மாஸ்டர் கோப்பையாகும். முழு ஆண்டிலும், தலைசிறந்த சாதனையை பெற்ற 8 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வு போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் இடம் பெறுகின்றன. இப்போட்டி நவம்பர் 16ம் நாள் நிறைவடையும்.
2009ம் ஆண்டு தொழில் முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டி இலண்டனில் நடைபெறும்.
10ம் நாள் நடைபெற்ற சிவப்பு பிரிவின் ஒரு ஆட்டத்தில், ஸ்விட்சர்லாந்தின் வீரர் Federerஉம் பிரான்ஸ் வீரர் Simonஉம் மோதினர். இந்த போட்டியில் Simon 2-1 என்ற ஆட்டக் கணக்கில் Federerஐ தோற்கடித்து தொழில்முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டியில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றார்.       

               

இதர சிவப்பு பிரிவு ஆட்டத்தில், Murray 2-1 என்ற ஆட்டக் கணக்கில் அமெரிக்க வீரர் Roddickஐ தோற்கடித்தார். Simon மற்றும் Murray தொழில்முறை ஆடவர் டென்னிஸ் சங்கத்தின் இறுதிப்போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்களின் எண்ணிக்கை 15 ஆகும். சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் Rogge, ஆஸ்திரிய ஒலிம்பிக் அமைப்புக் குழு நிறுவப்பட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், 39 வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 8 வீரர்கள் தான் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளனர். மீண்டும் சோதனை செய்த போது மேலும் 7 மாதிரிகள் வரையறையை எட்டவில்லை என்று Rogge கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழு 4770 மாதிரிகளை சோதனை செய்துள்ளது என்றும் அவர் கூறினார். 
                

சீனச் சர்வதேச சதுரங்க குழு 11ம் நாள் ஜெர்மனியின் Dresden நகருக்கு சென்று, 12ம் நாள் துவங்கும் 38வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டியில் கலந்துகொண்டது. சீன சர்வதேச சதுரங்க சங்கத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
தலைமை பயிற்சியாளர் Ye Jiangchuan தலைமையிலான சீன அணியில், Wang Yue, Pu Xiangzhi, Ni Hua, Wang Hao, Li Chao, Hou Yifan, Zhao Xue, Shen Yang, Ju Wenjun, TanZhongyi ஆகியோர் இடம் பெற்றனர்.
உலகின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 152 அணிகள் 38வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டியில் கலந்துகொண்டுள்ளன. வரலாறு கண்டிராத அளவிலான மிக பெரிய போட்டி இதுவாகும்.