
கிழக்கு சீனாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி புகழ்பெற்றமைக்கு இங்குள்ள 1078 தீவுகள் காரணமாகும். இவ்வேரியின் நீர் தூய்மையானது. கை நீட்டி இதைத் தொட்டால், ஓ!மிகவும் குளிர்ச்சியானது. நீரை அள்ளி, அருந்தினால் ஓ!இனிப்பானது. இதற்கு இயற்கையே காரணமாகும். இவ்வேரியின் கரையோரத்தில் வாழும் மக்கள், தம் கண்களைப் பாதுகாப்பது போல், ஏரி நீரைப் பாதுகாக்கின்றனர் என்பது மற்றொரு காரணமாகும்.

ஏரியின் கரையோரத்தில் வாழ்ந்துவரும் யூகொவ் கூறுகிறார், ஆயிரம் தீவு ஏரியின் நீர் மிகவும் தரமானது. 9 மீட்டர் முதல் 12 மீட்டர் ஆழம் வரை, நீரைத் தெளிவாகக் காண முடியும். உலகில் முதலாவது சிறந்த நீர் என்றும், நாட்டின் முதல் நிலை நீர் என்றும் அது போற்றப்படுகின்றது. ஏரி நீரை அருந்தலாம் என்றார் அவர். தீவுகள் வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. இவற்றில் சில, 3 தீவுகளுடைய கூட்டமாகவும், சில, 5 தீவுகளைக் கொண்டகூட்டமாகவும் தென்படுகின்றன.

|