பெய்ஜிங் மாநகரின் கிழக்குப் பகுதியிலுள்ள Songzhuang வட்டத்திலும், அதன் அருகிலுள்ள சில சிறிய கிராமங்ககளிலும், கடந்த சில ஆண்டுகளில், அதிக கலைஞர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். படிப்படியாக, இங்கே புகழ் பெற்ற சமகால கலை மண்டலம் உருவாகியுள்ளது. இதன் பயனாக, ஆண்டுக்கு ஒரு முறை, சீன Songzhuang பண்பாட்டு விழா நடைபெறு வருகிறது. தற்போது, கோலாகலமாக நடைபெறும் இந்த விழா, உள்நாடு மற்றும் வெளிநாட்டு அறிவாளர்கள், கலைஞர்கள், கலை நிறுவனங்கள், கலையில் ஆர்வம் மிகுந்த மக்கள், பெய்ஜிங் மாநகரின் நகரவாசிகள் ஆகியோரை பெரிதும் ஈர்த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங் மாநகரின் சமகால கலைகள் வெகுவாக வளர்ந்து வருகின்றன. நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் கலைஞர்கள், பெய்ஜிங்கிற்கு வருகின்றனர். போக்குவரத்து வசதியும் மலிவான வாழ்க்கைச் செலவும் வாய்ந்த Songzhuang வட்டம், இந்த கலைஞர்களை தன்பால் ஈர்த்து வருகிறது. 2005ம் ஆண்டு, இங்கு முதலாவது சீன Songzhuang பண்பாட்டு விழா நடைபெற்றது. இவ்வட்டத்தில் வாழ்கின்ற சுமார் 300 கலைஞர்கள், 2 கிலோமீட்டர் நீள விதியில், தங்களது படைப்புகளை எடுத்துக்காட்டினர். எனவே, சமூகத்தின் மிகுந்த கவனத்தை, இந்த கலை விழா ஈர்த்தது. அதற்குப் பின், மேலதிகமான கலைஞர்கள் இங்கு வருகின்றனர்.
தற்போது, Songzhuang வட்டத்தில் ஏறக்குறைய மூவாயிரம் கலைஞர்கள் உள்ளனர் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் அருகில் மேலதிகமான கலைஞர்கள் காணப்படுகின்றனர் என்று Songzhuang பண்பாட்டு விழாவின் அமைப்புக் குழுவைச் சேர்ந்த zhengna அம்மையார் அறிமுகப்படுத்தினார்.
நண்பர்களே, Songzhuang பண்பாட்டு விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|