• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 09:30:55    
NBA கூடைப்பந்து செய்திகள்

cri
NBA கூடைப்பந்து அணிகளுக்கிடைபோட்டி, 4ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. CLEVELAND CAVALIERS அணி, 77-80 என்ற புள்ளிக்கணக்கில் WASHINGTON WIZARDS அணியிடம் தோல்வியடைந்தது. NEW YORK KNICKERBOCKERS அணி, 100-88 என்ற புள்ளிக்கணக்கில் boston Celtics அணியை தோற்கடித்தது. Toronto raptor அணி, 108-102 என்ற புள்ளிக்கணக்கில் Orlando magic அணியை தோற்கடித்தது. Dallas mavericks அணி, 82-102 என்று புள்ளிக்கணக்கில் Vancouver grizzlies அணியிடம் தோல்வியடைந்தது.

உலக பல்கலைகழக மாணவர்களுக்கான 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டியின் பல்வேறு ஆட்டங்களுக்கான நுழைவுச் சீட்டுகள், 5ம் நாள் ஹார்பின் நகரின் 30 இடங்களில் விற்பனை செய்யப்பட துவங்கியது. இரசிகர்கள், பணம் கட்டியதுடன், நுழைவுச் சீட்டுகளை பெறலாம். தவிரவும், இணைய வசதி மற்றும் தொலைப்பேசி மூலம், இப்போட்டியின் துவக்க மற்றும் நிறைவு
விழாக்களுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவு செய்யலாம். 19ம் நாள் குலுக்கல் முறை மூலம், துவக்க மற்றும் நிறைவு விழாக்களின் நுழைவுச் சீட்டுகள் வினியோகம் செய்யப்படும்.

இப்போட்டியில் 122 ஆட்டங்கள் அடங்குகின்றன. 4 இலட்சத்து 20 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுகின்றன.
பெய்ஜிங் நேரப்படி 5ம் நாள் விடியற்காலை, 2008 2009ம் ஆண்டு இங்கிலாந்து ஃபா கோப்பை அரை இறுதிப்போட்டி நடைபெற்றது. MANCHESTER UNITED அணி, 3-0 என்ற கோல்கணக்கில் SOUTHAMPTON அணியை தோற்கடித்தது.
அதே நாள் விடியற்காலையிலும் 2008 2009ம் ஆண்டு ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடைபோட்டி தொடர்ந்து நடைபெற்றது. REAL MADRID அணி, 1-0 என்ற கோல்கணக்கில் VILLARREAL அணியை தோற்கடித்து, தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

2010 செலவாகும் வன்குவெர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்பு தொகை, 100 கோடி கனட டாலரை எட்ட வில்லை என்று அந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்பு அலுவலகத்துக்குப் பொறுப்பேற்கும் வாரியம் உள்ளூர் நேரப்படி 4ம் நாள் தெரிவித்தது.
கனடாவின் ராயல் குதிரைப் படை, வன்குவெர் காவற்துறை, கனடா இராணுவப் படை, எல்லை சேவை துறையின் அதிகாரிகள், தனிநபர் மெய்க்காப்பாளர் ஆகியோர் இணைந்து கூட்டு பாதுகாப்புக் குழுவை உருவாக்குவர். ராயல் குதிரைப் படை, இக்குழுவுக்கு தலைமை தாங்கும். திட்டப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் எட்டும். அவர்களில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக இருக்கும்.