• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-16 15:34:26    
மியாவ் இன மக்களின் விழாக்கள் அ

cri

மியாவ் இனத்தின் பாரம்பரிய விழாக்கள் மிக அதிகம். அவற்றில் பெரும்பாலானவை அறுவடை அல்லது விதைப்பதற்கு முன் நடைபெறுகின்றன. வெவ்வேறு இயற்கை, சமூகம், மதம் முதலிய காரணங்களினால், வேறுபட்ட இடங்களின் மியாவ் இன வாழ்க்கை, வேறுபட்ட சிறப்புகளைக் கொள்கின்றன.

மியாவ் இனத்தின் பண்பாட்டை விழாக்கள், போதுமான அவளில் வெளிப்படுத்த முடியும். அவர்கள் மிக அதிக விழாக்களைக் கொண்டாடுகின்றனர். Gui zhou மாநிலத்தில் சிறப்பு பெயர் உடைய விழாக்கள் நூற்றுக்கு மேலாகும்.

Gan miaochang விழா

இந்த பாரம்பரிய விழா, xuyonggulin முதலிய இடங்களில் மிகவும் வரவேற்கப்பட்டதாகும். இது, ஆண்டுதோறும் பிப்ரவரி 13ம் நாள், ஜுலை 3ம் நாள் என இரு முறை நடைபெறுகிறது. முன்பு, மியாவ் இன மக்களின் ஒரு கிளர்ச்சியில் தோல்வியடைந்த பின், மக்களுக்கிடை தொடர்பை அரசு தவிர்த்தது. மியாவ் இன மக்கள், lusheng என்ற இசை கருவியை இசைக்கின்ற பெயரில் மறைமுகமாக கூடினர். காலப்போக்கில் இத்தகைய கூட்டம் gan miaochang விழாவாக மாறியது.

.

Zengdai விழா

பிப்ரவரி 5ம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. Zengdai என்பது, இடுப்பிலணியும் வார் வழங்குவது என்று பொருட்படுகிறது. அருகில் வாழ்கின்ற இளைஞர்கள் கூடி, காதல இணைகளை தேடுகின்றனர். ஒருவர் யாரையாவது விரும்பினால், இடுப்பில் அணியும் வாரை அவருக்கு வழங்கி, திருமண பிரசத்தற்கான அன்பளிப்பாக கொள்கின்றனர். ஆனால், தில் வருத்தம் உணர்ந்தால், வாரை திரும்பி கேட்டு, பரிசத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

Hua shan விழா

குய் சோ மாநிலத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதி, யுன்னான் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதி, சிச்சுவான் மாநிலத்தின் தெற்கு பகுதி ஆகிய பிரதேசங்களின் மியாவ் இனமக்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு இடங்களின் மக்கள், வேறுபட்ட நாட்களில் இவ்விழாவை கொண்டாடுகின்றனர். விழாவுக்கு முன், Huashan கூட்டத்திற்கான தலைவர் குழு நிறுவப்படுகிறது. இக்குழு, 3, 7 அல்லது 12 ஆண்டுகாலம் பதவியேற்கிறது.

Ganqiu விழா

இது, ஒவ்வொரு இலையுதிர்காலம் வரும் போதும் நடைபெறுகிறது. மக்கள் கூடி, ஊஞ்சல் கட்டுகின்றனர். 8 பேர் உட்காரக் கூடிய ஊஞ்சல்களை உருவாக்குகின்றனர்னர். இது, இவ்விழாவில் மிக அதிக மக்களை கவர்கின்ற நடவடிக்கையாகும்.