
சீனாவின் தென் மேற்கில் குவெய்சோ மாநிலம் அமைந்துள்ளது. அதன் தலைநகர் குவெயாங். அங்கு, யுன்செ என்னும் அரசு நிலை வனப்பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை தர விரும்பும் இடம் இது.
 இப்பூங்காவின் நுழைவாயிலிருந்து தொடங்கி, ஜல்லி கல்லாலான ஒற்றைப் பாதை வழியாக செல்லும் போது, பக்கத்தில் தேவதாரு உள்ளிட்ட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களைக் காணலாம். வளர்கின்றன. பறவைகளின் பாட்டொலி கேட்கலாம். சறசறவென்று ஓடும் நீர், விலங்குகள் புல் தரையில் பாய்ந்துசெல்வது ஆகியவற்றையும் காணலாம். பூங்காவில், நடைப்பாதை, பயணிகள் ஓய்வு எடுக்கும் கூடார மண்டபம் ஆகியவை தவிர, செயற்கைக் கட்டடம் ஏதும் இல்லை. யுன்செ வனப் பூங்காவின் பரப்பளவு, 24 சதுர கிலோமீட்டர். முன்பு, ஒரு மரப் பண்ணையாக இருந்தது.

|