• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-11 11:07:36    
கனவு

cri

ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்பவர். ஒருமுறை மாணவர்களுக்கென வகுக்கப்பட்ட ஒழுக்க நெறிகளில் ஒன்றை மீறிவிட்டான் ஒரு மாணவன். கோபமடைந்த அந்த கண்டிப்பான ஆசிரியர் தவறு செய்த மாணவனை தன்னை வந்து சந்திக்குமாறு ஆள் அனுப்பினார். மாணவன் வரும் வரை ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார், கோபத்துடன். நேரம் சென்றுகொண்டிருந்தது. ஒருவழியாக அந்த மாணவனும் வந்து சேர்ந்தான். வந்ததும் ஆசிரியரின் முன் முழந்தாள் படியிட்டு " ஐயா நான் முன்னரே வருவதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நான் ஆயிரம் பொற்காசுகளை கண்டுபிடித்தேன். அதை என்ன செய்வது, எங்கே எப்படி செலவிடுவது என்று யோசித்து முடிவு செய்வதற்குத்தான் எனக்கு நேரம் விரையமானது என்றான் மாணவன்.
தங்கம் கிடைத்ததை பற்றி மாணவன் சொல்லக் கேட்டதும் கோபத்துடன் திடமாய் அமர்ந்திருந்த ஆசிரியர் கொஞ்சம் இளகினார். சரி, நீ எங்கே இந்த பொற்காசுகளை கண்டெடுத்தாய் என்று ஆசிரியர் மாணவனை கேட்டார்.
அதற்கு மாணவன் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருந்தன என்றான்.
ஆசிரியர், சரி அந்த பொற்காசுகளை வைத்து என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்.
மாணவன், ஐயா நான் ஒரு ஏழை மாணவன். இந்த பொற்காசுகள் பற்றி நான் என் மனைவியிடம் கலந்தாலோசித்தேன். நிலம் வாங்க 500 பொற்காசுகளும், வீடு கட்ட 200 பொற்காசுகளும், நாற்காலி, தட்டு முட்டு சாமான்கள் வாங்க 100 பொற்காசுகளும், வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை விலைக்கு வாங்க 100 பொற்காசுகளும் எஞ்சிய 100 பொற்காசுகளில் பாதியை எனக்கு புத்தகங்கள் வாங்கவும் முடிவெடுத்துள்ளோம். இனிமேல் நான் கடின முயற்சி மேற்கொண்டு படிக்க வேண்டும். மீதியுள்ள பொற்காசுகளை எனக்காக நீங்கள் கற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் சிரமங்கலுக்காக அன்பளிப்பாக தர விரும்புகிறேன் என்றானாம்.
இதைக் கேட்ட ஆசிரியர், " அட, நீ அன்பளிப்பாக பொற்காசுகளை தருமளவுக்கு நான் ஒன்றும் அப்படி பெரிதாக செய்யவில்லையே என்று சொன்னபடி, தனது சமையல்காரரை அழைத்து நல்ல சுவையான விருந்தொன்றை சமைக்குமாறு பணித்தார். விருந்து தாயாரானது மணவனை அழைத்து மகிழ்ச்சியாக சிரித்து பேசி, உண்டு குடித்தார். இருவரும் நன்றாக மது அருந்தி ஒருவர் மற்றவரின் நல்வாழ்க்கைக்காக வாழ்த்துக்கள் கூறி ஆரவாரமாக இருந்த நிலையில் போதை கொஞ்சம் தலைக்கேறத் தொடங்கிய போது. திடீரென சுதாரித்த ஆசிரியர், அது சரி நான் கூப்பிட்டு அனுப்பியதால் நீ அவசர அவசரமா புறப்பட்டு வந்தாய், வருவதற்கு முன் அந்த பொற்காசுகளை பத்திரமாக ஏதாவது பெட்டிக்குள் வைத்து பூட்டினாயா? என்று கேட்டார்.
அதற்கு மாணவன் அமைதியாக எழுந்து நின்றபடி, ஆசிரியரே ஆயிரம் பொற்காசுகளை எப்படி செலவழிக்கலாம் என்று திட்டமிட்டு முடித்த சீக்கிரம், என் மனைவி என் பக்கம் உருண்டு படுத்தால், நான் திடுக்கிட்டு எழுந்தேன், கண் திறந்தால் பொற்காசுகளை காணவில்லை. எனவே பெட்டியிருந்தும் பயன் என்ன என்றானாம்.
ஆக இவ்வளவு நேரமும் நீ கண்ட கனவை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறாயா என்றாராம் ஆசிரியர், ஆமாம் ஐயா என்றானாம் மாணவன்.
ஆசிரியருக்கு கோபம் தலைகேறியது ஆனால் மாணவனை விருந்துக்கெல்லாம் அழைத்து தனது விருந்தோம்பலை வெளிப்படுத்திய நிலையில் தனது சினத்தை காட்டினால் அது முரட்டுத்தனம். எனவே அவர் வேறு வழியின்றி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் விதமாய், நீ கனவில் கூட என்னை நினைவில் வைத்துள்ளது புரிகிறது. உண்மையிலேயே பொற்காசுகள் கிடைத்தால் நீ நிச்சயம் என்னை மறக்கமாட்டாய் என்றாராம். மாணவனை தன்னோடு மேலும் சில கோப்பைகள் மது அருந்த சொல்லி, பிறகே அவனை வீட்டுக்கு அனுப்பினாராம்.