ஒரு வேளை நிகழக் கூடிய நிலநடுக்கத்தை சமாளிக்கும் வகையில், போதலா மாளிகையை செப்பனிடுவதற்கென சிறப்புத் தொகையை சீன நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது என்று போதலா மாளிகையின் நிர்வாக அலுவலகத்தினை தலைவர் Qamba Kelzang கூறினார்.
அண்மையில் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளிடம் பேசுகையில், கடந்த ஆண்டின் அக்டோபர் 6ம் நாள் திபெத்தின் லாசா நகரின் Dang Xiong மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 6.6 ஆகப்பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன், நடுவண் அரசின் நிதி ஆதரவில், போதலா மாளிகையின் அடித்தளத்தை செப்பனிடும் திட்டப்பணி தடையின்றி உத்தரவாதம் செய்யப்பட்டதால், இந்த நிலநடுக்கத்தில் போதலா மாளிகை பாதிக்கப்பட்டாமல், பாதுகாப்பாக இருந்தது என்று Qamba Kelzang குறிப்பிட்டார்.
தற்போது, போதலா மாளிகைக்கான 2வது கட்ட செப்பனிடும் திட்டப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. நடுவண் அரசு இதற்கு 24கோடி யுவானை ஒதுக்கியுள்ளது என்றும் Qamba Kelzang கூறினார்.
|